அக். 22, 2009 62 லட்சம் பேருக்கு உணவு வழங்க வேண்டி எத்தியோப்பிய அரசு ஐ.நா. சபையிடம்
வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வரும் வறட்சியின் காரணமாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும்,
ஐ.நா.வின் உலக உணவு திட்டத்தில் எயத்தியோப்பியாவுக்கு அளிக்கப்பட வேண்டிய உணவுக்கு நிதி பற்றாக்குறை
நிலவுவதாகவும் செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது.மேலும் 1984 ம் ஆண்டு ஆரம்பித்து, கடந்த
25 ஆண்டுகளாக எத்தியோப்பி யாவில் நிலவி வரும் பிரச்சனைகளைத் தீர்க்க புது வித வழிகளைக் கண்டு பிடிக்க
வேண்டும் என Oxfam நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.