அக். 22, 2009 பிலிப்பைன்ஸ் நாட்டில் பத்து நாட்களுக்கு முன், அடிப்படை வாத முஸ்லிம் குழுவினரால்
கடத்தி செல்லப்பட்ட அயர்லாந்தைச் சார்ந்த மறைபணியாளர் அருட்தந்தை மைக்கில் சின்னோட்டை விடுவிக்குமாறு பிலிப்பைன்ஸ் நாட்டின் இஸ்லாமியத்
தலைவர்கள் இக்குழுவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 79 வயதான அருட்தந்தை சின்னோட் கடந்த 40 ஆண்டுகளாக பிலிப்பைன்ஸ் நாட்டிலேயே
அரும் பணி செய்தவர், மேலும் அண்மையில் இதய அறுவை சிகிச்சை மேற் கொண்டவர் என்ற காரணங்களை
எடுத்துக் கூறி இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் மறைபரப்பு ஞாயிறன்று மறையுரை ஆற்றிய திருத்தந்தை
அருட்தந்தை சின்னோட்டைப் பற்றி தன் மறையுரையில் குறிப்பிட்டார். மறைபரப்பு பணியில் ஈடுபட்டுள்ள குருக்கள், துறவியர்
பற்பல இன்னல்களையும் சந்திக்க வேண்டி யுள்ளதென திருத்தந்தை குறிப்பிட்டார்.