2009-10-21 11:18:56

ஹொண்டுராஸ் நாட்டில் திருச்சபையின் சமாதான முயற்சிகள் 


ஹொண்டுராஸ் நாட்டில் நிலவி வரும் அரசியல் பதட்ட நிலைகளைக் களைய, தலத் திருச்சபை அதிகாரிகள் முயன்று வருகின்ற போதிலும், அந்நாட்டு விசுவாசிகளும் தங்கள் ஜெபங்கள் மூலம் உதவி வருவதாகத் தெரிவித்தார் ஹொண்டுராஸ் நாட்டிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் லுயிகி பியாங்கோ.

ஆட்சி கவிழ்ப்பின் மூலம், பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசுத்தலைவர் மானுவெல் செலாயாவும் இடைக்கால அரசுத்தலைவராக உள்ள ரொபெர்தோ மிகெலெத்தியும் கத்தோலிக்கர்கள் எனினும் திருச்சபையின் சமாதான முயற்சிகள் பெருமளவிலான வெற்றிகளைக் காண முடியவில்லை என்ற கவலையை வெளியிட்டார் பேராயர்.
ஹொண்டுராஸ் ஆட்சிகவிழ்ப்பின் மூலம் துவங்கியுள்ள பதட்ட நிலைகளுக்கு அமைதியான தீர்வு காண, மக்களின் ஜெபத்திற்கும் அழைப்பு விடுத்தார் அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதுவர்.







All the contents on this site are copyrighted ©.