2009-10-21 16:34:34

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீதியும் சுதந்திரமும் வழங்கப்படுமாறு கொழும்பு ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை அழைப்பு


அக்.21,2009 இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீதியும் சுதந்திரமும் வழங்கப்படுமாறு கொழும்பு ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை மறைமாவட்ட ஆயர் துலீப் தெ சிக்கேரா அழைப்பு விடுத்தார்.

சிலோன் சபை என்ற ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் கொழும்பு மறைமாவட்டம் நடத்தும் ஆண்டுக் கூட்டத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்த ஆயர் துலீப், தனது சபையினரை தேசிய ஒப்புரவுக்காக வேலை செய்ய கேட்டுக் கொண்டார்.

அதேசமயம், இன்னும் அகதிகள் முகாம்களில் வாழும் இரண்டு இலட்சம் தமிழரை மறக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை சமுதாயத்தைப் புண்படுத்தியுள்ள கடந்த காலத் தவறுகளை நினைவுபடுத்தி அந்தக் காயங்களைக் குணப்படுத்துவதில் பிற மதங்கள் மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளோடு சேர்ந்து செயல்படுமாறும் ஆயர் கேட்டுக் கொண்டார்.

வன்னி முகாம்களில் சிக்கியுள்ள 125 ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை குடும்பங்களையும் நினைவுகூர்ந்தார் அவர்.

இலங்கைத் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளை தேசிய ஒப்புரவு மற்றும் குணப்படுத்துவதற்கு அர்ப்பணித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.