2009-10-19 14:54:10

ஆப்ரிக்க ஆயர்களுக்கு திருப்பீடப் பேச்சாளரின் உரை


அக்.19,2009 ஒப்புரவு, நீதி, அமைதி ஆகியவற்றை வளர்ப்பதில் ஆப்ரிக்காவின் பங்கு என்ன என்பது பற்றி ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவையில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளிடம் கூறினார் திருப்பீட பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி.

உரோமை மாநகரில் பல்வேறு காரணங்களுக்காக அநேக ஆப்ரிக்கர்கள் இருக்கிறார்கள் என்றுரைத்த அருட்தந்தை லொம்பார்தி, இவர்கள், திருச்சபையின் நிர்வாகம் வேலை, பத்திரிகைத் துறை, சமூகத் தொடர்புத் துறை, இலக்கியம், கலை எனப் பலதுறைகளில் செயல்படுவதையும் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு, பெருமளவில் ஆப்ரிக்கர்கள் வாழும் இடமாக உரோம் இருக்கின்றது என்று, உரோம் மாநகராட்சி மையத்திற்குச் சென்ற பேரவைத் தந்தையர்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார் அவர்.








All the contents on this site are copyrighted ©.