சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். ஓவியரும் கூட என்று வரலாறு
கூறுகிறது. புறவினத்தாராகிய லூக்கா, அப்போஸ்தலர் பவுலுடன் இணைந்து உழைத்தார். "அன்புமிக்க
மருத்துவர் லூக்கா" என்று பவுல் இவரைக் குறிப்பிடுகிறார்.
நான்கு நற்செய்தியாளர்களில்
ஒருவரான லூக்காவின் நற்செய்தி, "இரக்கத்தின் நற்செய்தி" என்றழைக்கப்படுகிறது. இடையர்கள்,
ஏழைகள், பெண்கள், சமாரியர், தொழுநோயாளிகள் என்று யூத சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட
பலருக்கும் முக்கிய இடம் அளித்து எழுதப்பட்டுள்ளது இந்த நற்செய்தி. இவர் மருத்துவர்,
கலைஞர் ஆகியோருக்கு பாதுகாவலராகக் கருதப்படுகிறார்.