2009-10-13 18:30:42

வியட்நாம் தலத் திருச்சபை ஜுபிலீ ஆண்டாகக் கொண்டாடத் திட்டம். 


வரும் ஆண்டை ஜுபிலீ ஆண்டாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது வியட்நாம் தலத் திருச்சபை. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாமில் இரு அப்போஸ்தலிக்க மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் 350 ம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாகக் கொண்டாடப்பட உள்ள 2010 ஜுபிலீ ஆண்டு, தலத் திருச்சபையின் இன்றைய நிலை மற்றும் அதன் சவால்கள் குறித்து ஆராய உதவுவதாக இருக்கும் என்றனர் வியட்நாம் ஆயர்கள்.
வியட்நாம் மறை சாட்சிகளின் விழாவான நவம்பர் 24 ஆம் தேதி துவக்கி வைக்கப்படும் இக்கொண்டாட்டங்கள் 2011 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி திருக்காட்சி விழா அன்று நிறைவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.