ஸ்காட்லாந்தில் கால்வின் எனப்படும் பிரிவினைச் சபையைச் சார்ந்த ஓர் உயர் குடும்பத்தில் பிறந்த
இவர், 17 வது வயதில், கத்தோலிக்க மறையைத் தழுவினார். சில ஆண்டுகளுக்குப் பின், இயேசு
சபையில் சேர்ந்தார். கால்வின் சபையினர் கத்தோலிக்கர்களிடம் வன்முறையை கடைபிடித்ததால்,
ஸ்காட்லாந்தில் பல கத்தோலிக்க குருக்கள் மறைமுகமாகவே பணி புரிய நேர்ந்தது. ஜானும் இதே
போல் வெவ்வேறு மாறு வேடமணிந்து பணி புரிந்து வந்தார். 11 மாதங்களில் கால்வின் குழுவால் பிடிபட்டார்.
5 மாதங்கள் சிறையில் பல இன்னல்களை அனுபவித்தார். 1615 ஆம் அண்டு தூக்கிலிடப்பட்டு இறந்தார்.
1976ஆம் ஆண்டு திருத்தந்தை 6ஆம் பவுல் இவரைப் புனிதராக உயர்த்தினார்.