சுரண்டப்பட்டு, ஆக்ரமிக்கப்பட்டு, அடிமைத்தனத்திற்கும் மரணத்திற்கும் கூட உள்ளாக்கப்பட்ட
ஆப்பிரிக்க கண்டம், மன்னிக்கும் பெருங்குணத்தைக் கையில் கொண்டு கலாச்சார விழிப்புணர்வை
வளர்த்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார் FAO எனும் உணவு மற்றும் வேளாண்மை இயக்குனர் ஜாக்ஸ் டியோப்.
ஆப்பிரிக்காவிற்கான சிறப்பு ஆயர் பேரவைக் கூட்டத்தில் இத்திங்களன்று
மாலை உரை யாற்றிய FAO இயக்குனர் ஆப்பிரிக்காவின் பசி மற்றும் போதிய சத்துணவின்மையிலிருந்து
அக்கண்டம் விடுதலைப் பெற வேண்டுமானால், முதலில் அது அமைதியிலும் ஐக்கியத்திலும் வாழ்வது
உறுதி செய்யப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆப்பிரிக்காவில் ஏழை மக்களிடையே
கத்தோலிக்கத் திருச்சபையின் பணிகளை வெகுவாகப் பாராட்டுவதாகவும் கூறினார் FAO இயக்குனர்.