சட்டீஸ்கார் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் குழந்தை இறப்பை தடுப்பதற்குத் தலத்திருச்சபை
உதவி
அக்.09,2009 இந்தியாவின் சட்டீஸ்கார் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் பெருமளவில் இடம்
பெறும் குழந்தை இறப்பை தடுப்பதற்குத் தலத்திருச்சபை உதவி வருகிறது.
இக்குழந்தை
இறப்பு எண்ணிக்கை பற்றி அறிவித்த ஓர் அமைப்பு, குழந்தை பிறந்த முதல் நாளிலேயே பத்தாயிரம்,
ஏழு நாட்களுக்குள் இருபதாயிரம், ஒரு வயதை எட்டுமுன்னர் நாற்பதாயிரம் என இடம் பெறுவதாக
கூறுகிறது.
இதனைத் தடுப்பதற்கென மதம் இனம் என்ற வேற்றுமை பாராமல் தலத்திருச்சபை
உதவி செய்து வருவதாக ஆசியச் செய்தி நிறுவனம் அறிவித்தது.