2009-10-08 16:20:53

 இஸ்லாமியருடன் சமய உரையாடலில் ஈடுபட வேண்டும் - வட ஆப்பிரிக்க ஆயர்கள்


வட ஆப்பிரிக்காவில் உள்ள தலத் திருச்சபை இஸ்லாமியருடன் சமய உரையாடலில் ஈடுபட வேண்டுமென வட ஆப்பிரிக்க ஆயர்கள் கூறினர். வத்திக்கானில் நடந்து வரும் ஆப்பிரிக்காவுக்கான சிறப்புப் பேரவையில், துனிஸ் மறைமாவட்ட ஆயர் மரூன் லாஹாம் இக்கருத்தை வலியுறுத்தினார். வட ஆப்பிரிக்காவில் கல்வி மற்றும் உடல் நலம் குறித்த துறைகளில் கிறிஸ்தவர்களின் பணியை அனைவரும் உணர்ந்திருப்பது ஒரு நலமான சூழ்நிலையே என்றும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி, பெரும்பான்மையினராய் வாழும் இஸ்லாமியர் குறித்த பயங்களை ஒதுக்கி வைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நடத்துவது மிகவும் பயனளிக்கும் முயற்சி எனவும் ஆயர் லாஹாம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.