அடுத்த ஆண்டு முடிவதற்குள் மேலும் 9 கோடிப் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்,
உலக வங்கி
அக்.07,2009 தற்போது உலகு எதிர் நோக்கும் பொருளாதாரச் சரிவு வளரும் நாடுகளையும் பாதித்துள்ள
வேளை, அடுத்த ஆண்டு முடிவதற்குள் மேலும் 9 கோடிப் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்
என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
துருக்கியின் இஸ்தான்புலில் நடைபெற்ற மாநாட்டில்
இவ்வாறு எச்சரித்த உலக வங்கி தலைவர் இராபர்ட் ஜோலிக், பொருளாதாரச் சரிவால் அதிகமாகப்
பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பெருமளவான வளங்கள் கிடைப்பதற்கு வழி செய்யப்படுமாறும்
கேட்டுக் கொண்டார்.
உலகின் 79 மிக ஏழை நாடுகளுக்கு வருங்காலத்தில் கடன்களும்
மான்யங்களும் வழங்கப்படுவதற்கு புதிய முறை அமைக்கப்படுவதற்கான உலக வங்கியின் திட்டத்தையும்
அவர் அறிவித்தார்.
இதற்கு 2000 கோடி டாலர் உதவிக்கு சர்வதேச அளவில் உறுதி வழங்கப்பட்டிருப்பது
பற்றியும் ஜோலிக் தெரிவித்தார்.