நன்னெறிக் கூறுகள் வளர்க்கப்படுவதற்குத் தலத்திருச்சபை எடுத்து வரும் முயற்சிகளுக்கு
எல்லா நிலைகளிலும் ஆதரவு வழங்கப்பட திருத்தந்தை அழைப்பு
அக்.02,2009 திருப்பீடத்துக்கான நெதர்லாண்ட்ஸ் நாட்டுப் புதிய தூதுவர் ஹென்றியெட்டா யோஹான்னா
கொர்னேலியா மரியா ப்பான் லின்டன் லெய்ஜெய்ட்டெனிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று
உரையாற்றிய திருத்தந்தை, பாதுகாப்பான குடும்ப சூழல்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்
காட்டினார்.
உறுதியான குடும்பங்களை உருவாக்குவதற்கு நெதர்லாண்ட்ஸ் கத்தோலிக்கத்
திருச்சபை ஆற்றி வரும் சேவைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, நன்னெறிக் கூறுகள் வளர்க்கப்படுவதற்குத்
திருச்சபை எடுத்து வரும் முயற்சிகளுக்கு எல்லா நிலைகளிலும் ஆதரவு வழங்கப்படுமாறு கேட்டுக்
கொண்டார்.
பல்வேறு நீதித்துறை அமைப்புகளுக்கு உறைவிடமாகவும் ஐரோப்பிய பொருளாதார
சமூகத்தை உருவாக்கிய உறுப்பினர்களில் ஒன்றாகவும் விளங்கும் நெதர்லாண்ட்ஸ் நாடு, உலகில்
அமைதியையும் வளமையையும் ஊக்குவிப்பதில் நல்ல வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றது என்றும்
திருத்தந்தை கூறினார்