அக்.02,2009. அன்பர்களே, தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை அமல்படுத்த அரசு
தீவிரமாய் களமிறங்கியுள்ளது. மூன்று ஆண்டுகளாக விவாத நிலையிலேயே இருந்து வந்த சமச்சீர்
கல்வித் திட்டம் அடுத்த கல்வியாண்டில் அமலாக உள்ளது முதற்கட்டமாக ஒன்று மற்றும் ஆறாம்
வகுப்பிற்கு பொதுப் பாடத் திட்டம் அமல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து பிற வகுப்புகளுக்கும்
அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்துள்ளார். எனவே இதில் கிறிஸ்தவ
கல்வி நிறுவனங்களின் நிலைப்பாடு பற்றி அறிய விரும்பி பாளையங்கோட்டை புனித சவேரியார் மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியரான அ.திரு.யாகு சே.ச அவர்களைத் தொலைபேசி வழியாகக் கருத்துக்களைக்
கேட்டோம்.