2009-10-01 17:15:36

மத்திய பிரதேசத்தில் திருச்சபையின் தலைவர்கள் கவலை 


அக். 2, 2009 மத்திய பிரதேசத்தில் மதமாற்றம் செய்து வருவதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்து வருவது பற்றி திருச்சபையின் தலைவர்கள் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர். அண்மையில் மாண்ட்லா மாவட்டத்தில் திருப்பயணம் மேற்கொண்ட 45 திருப்பயணிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். "கிறிஸ்துவ சமுதாயத்தை தொடர்ந்து அவமானப் படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி இது" என்று ஜபல்பூர் ஆயர் ஜெரால்ட் அல்மெய்டா கூறினார். மக்கள் தங்கள் குடியுரிமையையும், சுய மரியாதையையும் காப்பதற்கு போராட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்த இது போன்ற செயல்கள் நிகழ்கின்றன என்று ஆயர் மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.