அக்.01,2009 திருத்தந்தை 16ம் பெனடிக்ட், சைப்ரஸ் குடியரசுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள
வேண்டுமென அக்குடியரசுத் தலைவர் தெமெத்ரிஸ் கிறிஸ்டோபியாஸ் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்
கொண்டார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் இவ்வியாழனன்று அறிவித்தது.
சைப்ரஸ்
குடியரசுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம் 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடம் பெறும்
என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வலுவலகம் அறிவித்தது