2009-09-29 17:26:21

சர்வதேச குருக்கள் த்யானத்தில் திருத்தந்தை ஒலி ஒளி செய்தி 


குருக்களுக்கென அர்பணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டில் ஒவ்வொரு குருவும் குருத்துவம் என்னும் திருவருட்சாதனத்தின் மேன்மையை மீண்டும் கண்டுகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட்.  பிரான்ஸின் அர்ஸ் நகரில் கடந்த ஞாயிறு முதல் வரும் சனி வரை இடம்பெறும் ஒரு வார சர்வதேச குருக்கள் தியானத்தில் பங்குபெறுவோருக்கு ஒலி ஒளி செய்திஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை, இத்தியானத்திற்கான தலைப்பான "குருவாயிருப்பதில் உள்ள மகிழ்வு: உலகின் மீட்புக்காகத் திருநிலைபடுத்தப்படுதல்." என்பதன் முக்கியத்துவம் குறித்தும் அச்செய்தியில் கூறியுள்ளார். குரு என்பவர் மகிழ்வின் மனிதர் மட்டுமல்ல, வருங்காலத்தின் மனிதரும் கூட, திருச்சபையின் இதயத்திலிருந்து குருத்துவ பணியை வேறு எதனாலும் அகற்றி ஈடு செய்ய முடியாது என மேலும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.