நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ' இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் ' என்று
அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ' என்னை உமக்கு எப்படித் தெரியும்? ' என்று
அவரிடம் கேட்டார். இயேசு, ' பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ்
இருந்த போதே நான் உம்மைக் கண்டேன் ' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து,
' ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர் ' என்றார். அதற்கு இயேசு, ' உம்மை
அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக்
காண்பீர் ' என்றார். மேலும், ' வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது
ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று
அவரிடம் கூறினார்.