2009-09-25 16:03:26

திருத்தந்தை  வருகிற 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து செல்ல வாய்ப்புகள் அதிகம் 


செப். 26, 2009 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் அண்மையில் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின்படி திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் வருகிற 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து செல்ல வாய்ப்புகள் அதிகமுள்ளதேனக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தினங்களுக்கு முன் பிரிட்டனின் முதலமைச்சர் கார்டன் ப்ரவுன் இந்த வாய்ப்பு பற்றி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

வருகிற மே மாதம் கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் முத்திபேறு பெற்றவராய் உயர்த்தப்படும் தருணத்தில் திருத்தந்தையின் திருப்பயணம் அமையும் என்றும், இதுபற்றிய அதிகாரப்பூர்வமானத் தகவலை வத்திக்கான் விரைவில் வெளியிடுமென தான் எதிபார்ப்பதாகவும் பேராயர் நிக்கோல்ஸ் கூறினார்.
1982 ஆம் ஆண்டு திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் மேற்கொண்ட திருப்பயணத்திற்குப்பின் திருத்தந்தை ஒருவரால் மேற்கொள்ளப்படும் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.