ஜப்பானிய மொழியில் கத்தோலிக்கக் கருத்துக் களஞ்சியம்திருத்தந்தையிடம்
சமர்ப்பிக்கப்பட்டது.
செப். 25, 2009 ஜப்பானிய மொழியில் உருவாகி வரும் கத்தோலிக்கக் கருத்துக் களஞ்சியத்தின்
இறுதிப் பகுதி திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. டோக்கியோவின் ஸொபையா பல் கலை கழகத்தின்
நிர்வாக அவை இயக்குனர் பேராயர் ஜியுஸெப்பெ பிட்டாவு இதனைத் திருத்தந்தையிடம் அளித்தார்.
பல்கலை கழகத்தின் நூற்றாண்டு நிறைவையொட்டி வெளியிடப்படும் இந்த கருத்துக் களஞ்சியம்,
ஏறத்தாழ 6000 பக்கங்கள் கொண்டதெனவும், இதற்கானப் பணிகள் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன என்றும்,
திருத்தந்தைக்கு அளிக்கப்பட்ட 4 வது பகுதியுடன் இப்பணி நிறைவு அடைகிறது எனவும் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.