2009-09-24 17:12:25

சீனாவின் 60 வது  குடியரசு தினத்தையொட்டி கத்தோலிக்க ஆயர்களை விடுவிக்க வேண்டும்


செப். 25, 2009 சீனாவின் 60 வது  குடியரசு தினம் அண்மையில் வருவதையொட்டி, அந்நாட்டுச் சிறைகளில் இருக்கும் கத்தோலிக்க ஆயர்களை விடுவிக்க வேண்டும் என ஒய்வு பெற்ற ஹாங்-காங் ஆயர், கர்தினால் ஜோசப் சென் சே-கியுன் சீன அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்டோபர் முதல் தேதியன்று சீன அரசு குடியரசு தினத்தை மாபெரும் அளவில் கொண்டாடத் திட்டமிட்டு வருகிறது. இதையொட்டி, சீன அரசு கடந்த காலத்தில் இழைத்தத் தவறுகளைக் களைவதற்கு தைரியமாகச் செயல்பட வேண்டுமென்றும், இத்தவறுகளின் வெளிப்பாடாக, மார்ச் 30 ஆம் தேதி கைது செய்யப்பட ஆயர் ஜுலியஸ் ஜியா வையும், அக்டோபர் மாதம் முதல் இரகசியமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஆயர் ஜேம்ஸ் சு சிமினையும் விடுவிக்க வேண்டுமென கர்தினால் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.