நிகழ்ந்தவற்றையெல்லாம் குறுநில மன்னன் ஏரோது
கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், ' இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்
' என்றனர். வேறு சிலர், ' எலியா தோன்றியிருக்கிறார் ' என்றனர். மற்றும் சிலர், ' முற்காலத்து
இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் ' என்றனர். ஏரோது, ' யோவானின் தலையை நான்
வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே! ' என்று
சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.