ஏழ்மை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த அக்கறையே இன்றைய முதல் தேவை என்கிறார்
கர்தினால்.
செப். 22. பொருளாதார சிக்கல்களிலிருந்து மீள்வதற்கு நாடுகள் காட்டும் அக்கறை, ஏழ்மை
மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த பிரச்னைகளில் காட்டப்படுவதில்லை என கவலையை வெளியிட்டார்
ஸ்காட்லாந்த் கர்தினால் கெய்த் ஓ' ப்ரைன்.
பொருளாதரப் பிரச்னைகளால் வங்கிகள் திவாலாகும்
நிலை கடந்த ஆண்டு பல நாடுகளில் ஏற்பட்டபோது, அரசுகள் உடனடியாக நிதியுதவி வழங்கி அவைகளைக்
காப்பாற்றியதைக் குறிப்பிட்ட கர்தினால், ஏழ்மை அகற்றலிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும்
ஏன் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை முன்வைத்தார்.
ஏழை நாடுகளையே
தட்ப வெப்ப நிலை மாற்றம் அதிகம் பாதிக்கிறது என்ற கர்தினால் ஓ' ப்ரைன், 2000க்கும் 2004க்கும்
இடைப்பட்டக் காலத்தில் 26 கோடியே 20 இலட்சம் மக்கள் தட்ப வெப்ப மாற்றம் தொடர்புடைய பேரழிவுகளால்
பாதிக்கப்பட்டனர் என்ற ஐ.நா. அறிக்கையையும் சுட்டிக் காட்டினார்.