மத்திய கிழக்குப் பகுதிக்கான உலக ஆயர்களின் சிறப்பு மாநாடு அறிவிக்கப்பட்டது
செப். 19, 2009 மத்திய கிழக்குப் பகுதிக்கான உலக ஆயர்களின் சிறப்பு மாநாடு 2010 ஆம் ஆண்டு
அக்டோபர் 10 முதல் 24 வரை வத்திக்கானில் இடம் பெறும் என அறிவித்தார் திருத்தந்தை 16 ஆம்
பெனெடிக்ட்.
கீழைரீதி கத்தோலிக்க திருச்சபையின் பிதாபிதாக்கள் மற்றும் முக்கிய
பெராயர்களை இச்சனியன்று பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் சந்தித்தத் திருத்தந்தை,
வரும் ஆண்டு அக்டோபரில் இடம் பெற உள்ள இவ்வாயர்களின் மாநாட்டிற்கு 'மத்திய கிழக்கு திருச்சபையின்
ஐக்கியமும் சாட்சிய வாழ்வும்: விசுவாசிகளாக மாறியுள்ளவர்கள் ஒரே இதயத்தையும், ஆன்மாவையும் கொண்டுள்ளனர்.'
என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதென அறிவித்தார். அமைதியைப் பற்றி பேசும் போது,
தன் மனதில் மத்திய கிழக்குப் பகுதிக்கான அமைதியே முன்னிலை வகிப்பதாகவும், அப்பகுதியின்
அமைதிக்காக தான் தொடர்ந்து செபிப்பதாகவும் கீழைரீதி திருச்சபை தலைவர்களிடம் பாப்பிறை கூறினார்.