செப். 21. ப்ரசிலின் அமசோன் காட்டுப் பகுதியில் மறைப்பணியாற்றி வந்த இத்தாலியக் குரு
ஒருவர் அடையாளம் தெரியாத மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ப்ரசிலின்
மானாவுஸ் பகுதியில் கடந்த ஈராண்டுகளாக பங்குக் குருவாகப் பணியாற்றிய இத்தாலியின் பதுவை
மறைமாவட்ட குரு. ருஜெரோ ருவோலெத்தோவை சுட்டு விட்டு ஓடியவர்களை பின்புறமிருந்தே கவனித்துள்ளார்,
உடன் பணிபுரிந்த தியாக்கோன் ஒருவர்.
2003ம் ஆண்டு முதல் ப்ரசில் நாட்டில் பணியாற்றிவந்த
குரு ருவோலெத்தோ, அண்மையிலேயே மானாவுஸ் பகுதியின் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பின்மைக்கு
எதிரான பொதுமக்கள் ஊர்வலம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.