2009-09-21 10:53:07

தேவநிந்தனைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கத்தோலிக்க அமைச்சர் 


செப். 19, 2009 பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டம், சிறுபான்மை மதத்தவர்களை பழிவாங்குவதற்காக, இஸ்லாமிய மத தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் அந்நாட்டு சிறுபான்மையினருக்கான அமைச்சர் ஷாபாஸ் பாத்தி.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்கடனில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய கத்தோலிக்கரான பாத்தி, இத்தகைய மத தீவிரவாதிகள் இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள் அல்ல, ஏனெனில், எம்மதமும் வன்முறை பயன்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை என்றார்.
உலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வேளை, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான தன் அற்பணத்தையும் பாகிஸ்தான் வெளிப்படுத்தவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.