2009-09-21 16:34:16

ஆப்கானிஸ்தானில் இறந்தவர்களுக்கு திருத்தந்தையின் இரங்கற் தந்தி


செப். 21. ஆப்கனிஸ்தானில் பணிபுரியும் இத்தாலிய துருப்புகளுள் ஆறு பேர் மற்றும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டது குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற்தந்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச்செயலர்.

இத்தாலிய படைவீரர்களிடையே ஆன்மீகப் பணிபுரியும் திருச்சபை மறைப்பணி ஆணையத்தின் தலைவர் பேராயர் வின்சென்ஸோ பெல்விக்கு திருத்தந்தையின் பெயரால் கர்தினால் தர்சீஸியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள தந்திச் செய்தி, இறந்தவர்களுக்கான திருத்தந்தையின் ஜெபத்திற்கு உறுதி கூறுவதுடன், இவ்வுயிரிழப்புக்களால் துன்புறும் குடும்பத்தினர்க்கான ஆறுதலையும் தெரிவிக்கிறது.

கடந்த வியாழனன்று காபூலில் கொல்லப்பட்ட 6 இத்தாலிய வீரர்களின் அடக்கத் திருப்பலி ரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காப் பேராலயத்தில் இத்திங்களன்று இடம்பெற்றதையொட்டி, திருத்தந்தையின் இவ்விரங்கல் தந்தி அனுப்பப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.