2009-09-18 16:14:20

வாஷிங்க்டன் நகரில் குடி பெயர்ந்தோருக்கான சிறப்பு செப வழிபாடு 


செப். 19, 2009 வாஷிங்க்டன் நகரில் அண்மையில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் பல்வேறு திருச்சபைகளைச் சார்ந்த 15 ஆயர்கள் பங்கேற்றனர்.

அந்த செப வழிபாட்டின் போது, பல்வேறு நாடுகளிலிருந்து குடி பெயர்ந்து அமெரிக்காவிற்கு வந்து பணி புரியும் அனைவருக்காகவும் சிறப்பான வேண்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வருபவர்கள் பலர். அவர்களது பணியை அதிகம் பயன்படுத்தும் அமெரிக்கர்கள், இப்படி குடிபெயர்ந்து வருபவர்களை மரியாதையுடன் நடத்துவதில்லை என்பது வருந்துதற்குரியதென ஆயர்கள் குறிப்பிட்டனர்.

நியூயார்க், ராசெஸ்டேர் எபிஸ்கோபல் மறைமாவட்டத்தின் ஆயரும், இந்தியாவிலிருந்து குடி பெயர்ந்து வந்தவருமான ஆயர் பிரின்ஸ் சிங் (Prince Singh), கிறிஸ்து நமக்குத் தந்த பிறரன்பு கட்டளையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.










All the contents on this site are copyrighted ©.