ஆப்கானிஸ்தானில் இத்தாலிய படைவீரர்கள் உயிரிழந்திருப்பது தமக்குப் பெரும் வருத்தம்
தருவதாக திருத்தந்தை கூறினார்.
செப். 19, 2009 செப் 17 காலை தாலிபான் தற்கொலைப் படையினரின் தாக்குதலால் காபுல் நகரில்
உயிரழந்த ஆறு இத்தாலிய படைவீரர்களைப் பற்றிய செய்தி தம்மை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது
எனத் திருத்தந்தை கூறினார்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ உதவி வரும் படைவீரர்கள்
இந்தத் தாக்குதலால் உயிரிழந்திருப்பது தமக்கு பெரும் வருத்தம் தருவதாக திருத்தந்தை கூறினாரென
வத்திக்கான் செய்தி தொடர்பு அதிகாரி பெடெரிகோ லோம்பார்தி (Fr Federico Lombardi) தெரிவித்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அமைதியைக் காப்பதற்கு உழைக்கும் வீரர்கள்
இப்படிப்பட்ட வன்முறையில் உயிரிழப்பது தனக்கு பெரும் அதிர்ச்சியையும், துன்பத்தையும்
தருவதாக தெரிவித்த திருத்தந்தை, மறைந்த வீரர்களுக்காகவும், அவர்களை இழந்த குடும்பத்தினருக்க்காகவும்
தான் செபிப்பதாக கூறினார் என்று அருட்தந்தை லோம்பார்தி தெரிவித்தார்.