ஐரோப்பிய ஒன்றியம் அளிப்பதாகக் கூறும் தொகை இருமடங்காக உயர்த்தப்பட வேண்டும்
செப். 18, 2009. இயற்கைச் சூழல் சீரழிவைத் தடுப்பதற்கு முன்னேறி வரும் நாடுகளுக்கு ஐரோப்பிய
ஒன்றியம் அளிப்பதாகக் கூறும் தொகையை இருமடங்காக உயர்த்த வேண்டும் என்று, இங்கிலாந்து
மற்றும் வெல்ஷ் ஆயர்களின் அமைப்பு கூறுகிறது.
இவ்வாண்டின் டிசம்பர் மாதத்தில்
டென்மார்க், கொபென்ஹாகனில் நடைபெறவிருக்கும் இயற்கைச் சூழல் குறித்த உலக மாநாட்டினையொட்டி
அக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் கலந்துரையாடலில் இதுகுறித்து பேச வேண்டும்
என இவ்வாயர்களின் அமைப்பு கூறுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் உதவித் தொகையால்
முன்னேறிவரும் நாடுகளில் இயற்கைச் சூழலை அழிக்கும் வகையில் இல்லாமல், பாதுகாக்கும் வகையில்
முன்னேற்றப் பாதைகள் திட்டமிடப்பட வேண்டும் என இந்த ஆயர்களின் அமைப்பு வலியுறுத்துகிறது.