2009-09-10 16:42:22

வியட்நாம் - திருச்சபை பட்ட துன்பங்களை அனுபவித்த ஆயர் மறைவு. 


செப்டம்பர் 7 ஆயர் பால் லே டோக் த்ரோங் (Paul Le Doc Trong) தனது 91 வது வயதில் இறையடி சேர்ந்தார். 1945 இல் வியட்நாம் விடுதலை அடைந்ததும், பொதுவுடைமை அரசு வியட்நாம் திருச்சபைக்கு பல இன்னல்களை விளைவித்தது. இவைகளிலிருந்து தப்பிக்க பலர் தலைநகரை விட்டு வெளியேறினர். அப்போது குருவாக இருந்த ஆயர் த்ரோங் தலைநகரில் தங்கி, கிறிஸ்தவர்களுக்கும், திருச்சபைக்கும் ஏற்பட்ட பல இன்னல்களை நேரில் கண்டார், அவற்றில் பங்கேற்றார்.
1994 இல் தனது 76 வது வயதில் இவர் ஆயராக பொறுப்பேற்றார். மறைந்த திருத்தந்தை 2ஆம் ஜான் பால் இவரை ஹா நோய் (Ha Noi) உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமித்தார். செப் 7 காலமான ஆயரது உடல் செப் 9 அடக்கம் செய்யப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.