அக்காலத்தில் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: ' பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு
வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால்
தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர். ' நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும்
மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக்
கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து
கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ' உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?
' என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும்
மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன் பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில்
இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய் கண் தெரியும்.