பிலிப்பைன்சில் அருட்தந்தை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
செப்.07,2009 பிலிப்பைன்சின் சமார் மாகாணத்தில் இனம் தெரியாத மனிதர்களால் அருட்தந்தை
ஒருவர் இஞ்ஞாயிறன்று கொல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறை அறிவித்தது.
கட்டார்மான்
மறைமாவட்டத்தின் சமூகநலப்பணி மைய இயக்குனரான 48 வயதாகும் அருட்தந்தை செசிலியோ லுசெரோ
அவரது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஆயுதங்களைக் கொண்டிருந்த ஏறத்தாழ முப்பது பேர்
அவரை மடக்கிக் கொலை செய்துள்ளனர் என்று காவல்துறை மேலும் கூறியது.
கொலை செய்யப்பட்டுள்ள
அருட்தந்தை லுசெரோ, மனித உரிமைகளுக்காகப் போராடியவர் மற்றும் ஏழைகளுக்கு அதிகம் உதவி
செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொலை செய்யப்பட்டுள்ள இக்குரு, கொலை
செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாகக் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார் என அக்குருவின்
ஆயர் இம்மானுவேல் ட்ரான்ஸ் கூறினார்.