2009-09-07 16:29:47

குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய இளைஞர்களுக்கு உண்மையான இறைமனிதர்களாக இருக்கும் பயிற்சியாளர்கள் தேவை, திருத்தந்தை


செப்.07,2009 இன்றைய இளைஞர்கள் குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆவலாக இருக்கின்றனர், எனினும் உலகப்போக்கு அதிகமாகவுள்ள சமுதாயத்தில் வளர்ந்து வரும் அவர்களுக்கு, உண்மையான இறைமனிதர்களாக இருக்கும் பயிற்சியாளர்கள் தேவை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையை சந்திக்கும் அட்லிமினாவை முன்னிட்டு பிரேசில் நாட்டு ஆயர்களின் ஒரு குழுவை இத்திங்களன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, குருக்கள் ஆண்டு சிறப்பிக்கப்பட்டு வரும் இந்த ஆண்டில் குருத்துவ பயிற்சியில் கவனம் செலுத்தவும் கேட்டுக் கொண்டார்.

ஐரோப்பாவை போன்ற பெரியதாக இருக்கும் பிரேசில் நாடு, போர்த்துக்கல் நாட்டிடமிருந்து விடுதலை அடைந்ததை இத்திங்களன்று சிறப்பித்ததைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, அந்நாடு தற்சமயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டினார்.
புதிய தலைமுறைகள் கடவுள் மீது மிகுந்த தாகம் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள் என்றும் அவர்களை உருவாக்குவதற்கு உண்மையான கடவுள் மனஇதர்கள் தேவை என்றும் திருத்தந்தை பிரேசில் ஆயர்களிடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.