வத்திக்கான் வானொலியின் சென்னை அலுவலகப் பணியாளர் மறைவு
செப்.04,2009 நம் நீண்ட கால அபிமான அன்புள்ளம் சென்னை வில்லிவாக்கம் ஏ.வி.ஜார்ஜ் இவ்வியாழன்
மாலை இறைபதம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.
வியாழன் மாலை 4 மணியளவில்
வேலை முடிந்து வீடு திரும்பியவர் 5 மணிக்கெல்லாம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரின்
பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.
அவரின் ஆன்மா நிறைசாந்தியடைய செபிப்போம். கடந்த பல ஆண்டுகளாக நம் சென்னை அலுவலகத்தில்
பணியாற்றிக் கொண்டிருந்த ஏ.வி.ஜார்ஜ், கடின மற்றும் நேர்மையான உழைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.