விவிலியம் சுற்றுச் சூழல் குறித்த நல்ல படிப்பினைகள்கொண்ட சிறந்த நூல்
செப். 3, 2009. உலகத் திருச்சபைகள் அவையின் மத்திய குழு - WCC - சுற்றுச் சூழல் பற்றியதொரு
அறிக்கை வெளியிட்டுள்ளது. நமது விவிலியம் சுற்றுச் சூழல் குறித்த நல்ல படிப்பினைகள் கொண்ட
சிறந்த நூல் எனவும் கிறிஸ்தவர்கள் உலகத்தையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கவும், மேம்படுத்தவும்
கடமைப்பட்டுள்ளனர் எனவும் இந்த அறிக்கை கூறுகின்றது.
சுற்றுச் சூழலுக்கு ஆபத்து
விளைவிக்கும் பல முயற்சிகளைக் கைவிட வேண்டும் என முன்னேறியுள்ள நாடுகளின் அரசுகளை நமது
திருச்சபைகள் கட்டாயப்படுத்தவேண்டும் என இந்த அறிக்கை கூறுகின்றது.
கோபென்ஹேகனில்
வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள சுற்றுச் சூழல் குறித்த ஐக்கிய நாட்டு கருத்தரங்கில் முக்கியமான
முடிவுகளை எடுக்க பல்வேறு அரசுகள் முயலவேண்டும் என உலகத் திருச்சபைகள் அவையின் மத்திய
குழு - WCC - பரிந்துரைக்கிறது.