அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகளின் அனைத்துக் கூறுகளிலும் நீதியும் அன்பும் கடைபிடிக்கப்பட
வேண்டும், பிதாப்பிதா பர்த்தலோமேயோ
செப்.01,2009 உலக அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகளின் அனைத்துக் கூறுகளிலும் நீதியும்
அன்பும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கான்ஸ்டாண்டிநோபிள் பிதாப்பிதா பர்த்தலோமேயோ அழைப்பு
விடுத்துள்ளார்.
வருகிற டிசம்பர் 7 முதல் 18 வரை கோப்பன்ஹாகனில் இடம் பெறவுள்ள
வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பிதாப்பிதா பர்த்தலோமேயோ,
அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகள், இலாபத்தை மட்டும் நோக்கியதாக, அதிலும் குறுகிய கால
நோக்குடையதாக இருக்கக் கூடாது என்று வலியிறுத்தியுள்ளார்.
இப்பூமியின் வளங்களை
வருங்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்வதற்கு உதவியாக உலகத் தலைவர்கள் தீர்மானங்கள்
எடுப்பார்கள் மற்றும் சுற்றுச்சூழல் காக்கப்படுவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்பதில்
தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் பிதாப்பிதா தெரிவித்தார்.
படைப்புக்களாகிய
நாம், படைப்பை அன்பு செய்து அதனைக் காக்க வேண்டுமென்பது இறைத்திட்டம் என்பதையும் கோடிட்டுக்
காட்டிய அவர், படைப்பை மாசுபடுத்தாத வாழ்வை வாழத் தீர்மானம் எடுப்போம் என்றும் கேட்டுக்
கொண்டார்.