விசாரணையின் போது சித்ரவதைகள் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்வதற்கானச் சட்டங்கள் உடனடியாகக்
கொண்டுவரப்பட ஆப்ரிக்க ஒன்றிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் அழைப்பு
ஆக.29,2009. கைதிகள் விசாரிக்கப்படும் போது சித்ரவதைகள் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்வதற்கானச்
சட்டங்கள் உடனடியாகக் கொண்டுவரப்படுமாறு ஆப்ரிக்க ஒன்றிய அவையின் மனித உரிமைகள் ஆணையத்
தலைவர் காத்ரீன் டியூப் அட்டோக்கி ஆப்ரிக்க அரசுகளுக்கு அழைப்புவிடுத்தார்.
உகாண்டா
நாட்டுச் சிறைகளையும் காவல்துறை அமைப்பையும் பார்வையிட்ட பின்னர் இவ்வாறு அழைப்புவிடுத்த
அட்டோக்கி, நான்கு ஆப்ரிக்க நாடுகள் மட்டுமே சித்ரவதைகளைத் தடை செய்வதற்கு விருப்பம்
தெரிவித்தன என்று தெரிவித்தார்.
ஆப்ரிக்கக் கண்டத்தில் சித்ரவதை பெரிய பிரச்சனையாக
இருக்கின்றது என்றும் பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகள், சித்ரவதை நடவடிக்கைகளைக் குற்றமாக
இன்னும் கருதவில்லை என்றும் அவர் கூறினார்.