2009-08-27 20:15:57

விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி பெற திருத்தந்தை தந்தி.270809 .


ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி பெற திருத்தந்தை தந்தி வழிச அனுதாபச் செய்தியை பெல்லூனோவின் ஆயருக்கு இம்மாதம் 26 ஆம் தேதி அனுப்பியுள்ளார் . வடக்கு இத்தாலியில் இருக்கும் கோர்ட்டீனாப்பகுதியின் பெல்லூனாவில் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் 2007 ஆம் ஆண்டு அவரது கோடை விடுமுறையைச் செலவிட்டார் . அப்பகுதியில் ஹெலிகாப்டர் எண் 118 தற்போது விபத்துக்குள்ளாகியதில் நால்வர் இறந்த செய்தியைக் கேட்டு திருத்தந்தை மிக்க வருத்தமுற்றார் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவருடைய ஆழ்ந்த அனுதாபத்தை இறந்தவர்களின் உறவினர்களுக்கும் அவர் முன்னர் தங்கியிருந்த பெல்லோனோ ஆயர் ஜோசப் ஆண்டிரிக்குக்கும் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே வழியாகத் தெரிவித்துள்ளார் . விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் இலக்கம் 118 ஐத்தான் திருத்தந்தை பெல்லோனோவில் தங்கியிருந்தபோது பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .








All the contents on this site are copyrighted ©.