எட்வர்ட் கென்னடி மறைவுக்கு ஆயர் சீமஸ் ஹேகார்ட்டி அனுதாபம் .270809.
இவ்வாரம் செவ்வாய் இரவு காலமான அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் கென்னடிக்கு
அயர்லாந்தின் ஆயர் சீமஸ் ஹேகார்ட்டி அவர் ஆற்றிய நற்செயல்களுக்குப் புகழாராமும் சாற்றியுள்ளார்.
எட்வர்ட் கென்னடி மறைவு கேட்டு துயரமடைந்த டெர்ரியின் ஆயரும் அயர்லாந்தின் ஆயர்குழுவின்
இடம் பெயர்வோர் மன்றத்தலைவருமான சீமஸ் ஹேகார்ட்டி அமெரிக்காவிலுள்ள அயர்லாந்து நாட்டைச்
சேர்ந்தவர்கள் நீதியை நிலைநாட்டிய உறுதியான தலைவரை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
புலம் பெயர்வோர் முக்கியமாக அயர்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான
சட்டங்களில் சீர் திருத்தங்களைக் கொண்டு வந்தவர் எட்வர்ட் கென்னடி எனத் தெரிவித்தார்
. வட அயர்லாந்தில் அமைதியைக் கொண்டு வர பெரிதும் அவர் முயற்சிகள் செய்தாகவும் தெரிவித்தார்
ஆயர் சீமஸ். எட்வர்ட் கென்னடியின் ஆன்ம சாந்திக்காகச் செபிப்பதாகத் தெரிவித்த ஆயர் சீமஸ்
அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவருடைய அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்
.