வத்திக்கானோடு பல துறைகளில் பிரேசில் அரசு ஒத்துழைப்பு . 210809 .
வத்திக்கான் திருப்பீடத்தோடு பல துறைகளில் பிரேசில் அரசு ஒத்துழைப்புத் தர உடன்பாடு செய்துள்ளது
. ஒப்பந்தத்தைத் பிரேசில் நாட்டின் வெளியுறவுத்துறை அமைப்பு சென்றவாரம் வெளியிட்டதாக
, இத்திங்கள் ரியோடி ஜெனெய்ரோவின் பேராயர் ஒராணி ஜான் டெம்பெஸ்டா தெரிவித்துள்ளார்.
1889 ஆம் ஆண்டு குடியாட்சி தொடங்கிய பிறகு இதுவே முதல் முறையாக பிரேசில் அரசு கத்தோலிக்கத்
திருச்சபைக்குச் சட்ட ரீதியாக நாட்டில் முழுமையான அதிகாரத்தோடு இயங்குவதற்கு அங்கீகாரம்
அளித்துள்ளது . இதன்படி கத்தோலிக்கச் சமயக் கல்வி அரசுக் கல்விக்கூடங்களில் பாடமாக அமைக்கப்படும்.
இந்த ஒப்பந்தப்படி நடைமுறையில் இருந்துவந்த சமரசப்போக்கும் ஒத்துழைப்பும் சட்டரீதியாக்கப்பட்டுள்ளது.
சமயச் சார்பற்ற குடியாட்சி நாடாகிய பிரேசில் சமயச் சுதந்திரத்துக்குத் தடையாக இராது.
திருச்சபைச் சட்டப்படி திருமணங்களை நடத்தவும் , கல்விக்கூடங்களை நடத்தவும் இந்த ஒப்பந்தம்
அதிகச் சுதந்திரமளிப்பதாகப் பேராயர் ஒராணி ஜான் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் சென்ற
ஆண்டு நவம்பர் மாதம் வத்திக்கானுக்குப் பிரேசில் நாட்டுத் தலைவர் லூயிஸ் இன்னாசியோ லூலா
வந்தபோது கையொப்பமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . அரசு இதனை நாட்டின் கூட்டாட்சி மன்றத்தில்
அடுத்தவாரம் அங்கீகாரம் செய்யவுள்ளது. பிரேசில் நாட்டின் 2 கோடி மக்கள் தொகையில் 74 விழுக்காடு
மக்கள் கத்தோலிக்கர்கள்.15 விழுக்காடு மக்கள் பிரிவினைக் கிறிஸ்தவர்கள் .