நிகராகுவா ஆயர்களுக்குக் கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அமெரிக்காவில்
உள்ள நிகராகுவாவில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதாக ஆயர்கள் திருத்தந்தைக்குத் தெரிவிக்கவுள்ளனர்
. அந்நாட்டில் உள்ள வத்திக்கான் திருப்பீடத்தின் தூதர் பேராயர் என்றி ஜோசப் நோவாக்கி
வழியாக திருத்தந்தைக்கு நிலைமையை வெளிப்படுத்தவுள்ளனர் . ஆகஸ்ட் 9 ல் மானாகுவா பேராலயத்தில்
நடந்த ஒரு கலைவிழாவின் போது விஷமிகள் மக்கள்மீது தாக்குதல் நடத்தியிருந்தனர் . எஸ்டெல்லியின்
ஆயர் ஜூவான் மாத்தாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக ஆயர் தெரிவித்துள்ளார். அந்நாட்டின்
இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த தலைவர் தானியேல் ஓர்டேகாவின் தூண்டுதலால் இந்த வன்முறைகள்
நடத்தப்படுவதாகச் செய்தி ஏடுகள் தெரிவிக்கின்றன.