2009-08-20 12:49:25

நிகராகுவா ஆயர்களுக்குக் கொலை மிரட்டல் .200809 .


நிகராகுவா ஆயர்களுக்குக் கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவாவில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதாக ஆயர்கள் திருத்தந்தைக்குத் தெரிவிக்கவுள்ளனர் . அந்நாட்டில் உள்ள வத்திக்கான் திருப்பீடத்தின் தூதர் பேராயர் என்றி ஜோசப் நோவாக்கி வழியாக திருத்தந்தைக்கு நிலைமையை வெளிப்படுத்தவுள்ளனர் . ஆகஸ்ட் 9 ல் மானாகுவா பேராலயத்தில் நடந்த ஒரு கலைவிழாவின் போது விஷமிகள் மக்கள்மீது தாக்குதல் நடத்தியிருந்தனர் . எஸ்டெல்லியின் ஆயர் ஜூவான் மாத்தாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக ஆயர் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த தலைவர் தானியேல் ஓர்டேகாவின் தூண்டுதலால் இந்த வன்முறைகள் நடத்தப்படுவதாகச் செய்தி ஏடுகள் தெரிவிக்கின்றன.








All the contents on this site are copyrighted ©.