2009-08-20 12:41:18

கைகால்களை இழந்தவருக்குத் திருத்தந்தை ஆசி வழங்கினார். 200809 .


இம்மாதம் 19 ஆம் தேதி புதன்கிழமை 18 வயதுடைய இலங்கை இளைஞரின் கனவு நனவானது. ராஜீவ் ஜானைன் என்பவர் ரயில் விபத்தில் அவரது கால்களையும் கைகளையும் இழக்க நேரிட்டது . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டை நேரில் கண்டு அவருடைய ஆசி பெற விழைந்த ராஜீவ் இப்புதனன்று திருத்தந்தையை அவரது கோடைகால இல்லம் காஸ்டல் காண்டோல்போவில் புதன் மறைபோதகத்துக்குப்பின்னர் சந்தித்தார். திருத்தந்தை அவரை வரவேற்று ஆசி வழங்கி ஆறுதல் கூறினார். செயற்கைக் கை கால்களோடு திருத்தந்தையின் முன் நின்று ஆசி பெற்றார் ராஜீவ் ஜானைன். ராஜீவின் சகோதரர் குருவாவதற்காகப் பயின்று கொண்டிருக்கிறார். அவருடைய ஒரு சகோதரி துறவுபூண்டு அருள்சகோதரியாக பிலிப்பீன்ஸ் நாட்டில் பணிபுரிகிறார்.

தெற்கு இத்தாலியின் கத்தோலிக்கப் பங்குத்தளத்தில் பணிபுரியும் தந்தை ஜோசப்பே யாஸ்ஸோ என்ற கருணையுள்ளம் படைத்த செம்மல் அங்குள்ள பங்கு மக்களிடம் பணம் திரட்டி செயற்கைக் கால்களைப் பொறுத்தவும் இத்தாலிக்கு வருவதற்கும் உதவியிருக்கிறார். பங்கு மக்களின் உதவியோடு பல்வேறு திட்டங்களுக்கு இலங்கையின் மக்களின் துயர் நீக்க அவர் பல ஆண்டுகளாக உதவி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .








All the contents on this site are copyrighted ©.