2009-08-17 15:32:04

எல்லூரு மறைமாவட்ட ஆயர் ஜான் முலகடா இஞ்ஞாயிறு நண்பகலில் இறைவனடி சேர்ந்தார்


ஆக.17,2009 ஆந்திர மாநிலம், எல்லூரு மறைமாவட்ட ஆயர் ஜான் முலகடா இஞ்ஞாயிறு நண்பகலில் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.

ஆயர் முலகடா கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் துன்புற்றிருந்தார்.

இவர் 1937ம் ஆண்டு ஆந்திராவின் பரிப்பாடு கிராமத்தில் பிறந்து 1965ல் குருவாகவும் 1977ல் எல்லூரு மறைமாவட்டத்தின் முதல் ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார்.

ஆயர் ஜான் முலகடா, எல்லூரு மறைமாவட்டத்தை கடந்த 32 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் அடக்கச்சடங்கு திருப்பலி எல்லூரு அமலோற்பவி பேராலயத்தில் இச்செவ்வாய் காலை இந்திய நேரம் 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.