அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம், செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு
உறுதியாகச் சொல்கிறேன்.24 மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட
ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது ' என்றார்.25 சீடர்கள் இதைக் கேட்டு, ' அப்படியானால்
யார்தாம் மீட்புப் பெறமுடியும்? ' என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.26 இயேசு அவர்களைக்
கூர்ந்து நோக்கி, ' மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும் ' என்றார்.27
அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, ' நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப்
பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்? ' என்று கேட்டார்.28 அதற்கு இயேசு,
' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது
என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப்
பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.29 மேலும்
என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ,
நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக
அடைவர்.30 ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர் ' என்று
அவர்களிடம் கூறினார்.