2009-08-14 17:47:33

பீஜனூர் மறைமாவட்டத்துக்கு புதிய ஆயர் நியமனம் .140809 .


பீஜனூரின் சீரோ மலபார் மறைமாவட்ட ஆயர் கிரேஷியன் முண்டாடன் பதவியிலிருந்து ஓய்வு தருமாறு திருத்தந்தையிடம் விண்ணப்பித்திருந்தார் . திருத்தந்தை அவர் விருப்பப்படி பதவி ஓய்வு கொடுத்திருக்கிறார் . அவர் சிஎம்ஐ என்ற அமல அன்னையின் கார்மேல் துறவற சபையைச் சேர்ந்தவர் . அதே சபையைச் சேர்ந்த ஜான் வடக்கல் என்பவர் பீஜனூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . ஜான் வடக்கல் செப்டம்பர் 8 , 1943 ஆம் ஆண்டு பிறந்தவர் . இவர் டிசம்பர் 19 ல் 1975 ஆம் ஆண்டு குருவானவராகப் பட்டம் பெற்றார் . இறையியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பங்களூர் தர்மாரம் கல்லூரியில் பணி செய்ததோடு பல்வேறு பணித்தளங்களில் நற்செய்திப் பணியும் ஆற்றியிருக்கிறார் .








All the contents on this site are copyrighted ©.