தமது முந்நாள் மாணவர்களைச் சந்திக்க உள்ளார் திருத்தந்தை.140509.
தமது முந்நாள் மாணவர்களைச் சந்திக்க உள்ளார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட். தற்பொழுது
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் காஸ்டல் காண்டால்போ என்னும் அவரது கோடைகால இல்லத்திலிருந்து
அவரது வழக்கமான பணிகளை ஆற்றிவருகிறார் . இந்த ஆகஸ்ட் 27 லிலிருந்து 30 வரை காஸ்டல் காண்டால்போவில்
அவரது முந்நாள் மாணவர்களோடு கலந்து பேசுவார் . டியூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் ரீகன்ஸ்பர்க்
பல்கலைக்கழகத்திலும் பயின்ற மாணாக்கர்கள் அவரைச் சந்திக்க உள்ளனர் . ஆஸ்திரியாவின் தலைநகர்
வியன்னாவின் பேராயர் கர்தினால் ஜோசப் ஷூவன்பர்க்கும் இக்னேஷியஸ் வெளியீட்டைச் சேர்ந்த
தந்தை ஜோசப் பெஸ்சியோவும் முன்னர் திருத்தந்தையோடு இஸ்லாம் பற்றியும் உயிரியல் கோட்பாடு
பற்றியும் கலந்து பேசியுள்ளனர் .