2009-08-08 14:52:15

வரலாற்றில் ஆகஸ்ட் 10 புனித லாரன்ஸ்


புனித இலாரன்ஸ், திருத்தந்தை புனித இரண்டாம் சிக்ஸ்துசின் திருத்தொண்டராகப் பணிபுரிந்தவர். புனிதர்கள் பேதுரு, பவுலுக்கு அடுத்த மிகப் புகழ் வாய்ந்த மறைசாட்சி இவர் என்று சொல்லப்படுகின்றது. கொடுங்கோல் மன்னன் வலேரியன் காலத்தில் கி.பி.258ல் திருத்தந்தை புனித இரண்டாம் சிக்ஸ்துஸ் மறைசாட்சியாக இறந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் இலாரன்சும் அவருடன் நான்கு பேரும் மறைசாட்சிகளாக இறந்தனர்.

இதே ஆகஸ்ட் 10,

கி.மு.612 – அசீரியப் பேரரசர் சின்சரிஷ்கன் கொல்லப்பட்டான். நினிவே நகரும் அழிக்கப்பட்டது.

610 - முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள்.

1792 ப்ரெஞ்ச் புரட்சி வெடித்தது. மன்னன் 16ம் லூயி கைது செய்யப்பட்டார்.

1948 - ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.

2000 - உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது.








All the contents on this site are copyrighted ©.