பெண் பிறப்புறுகள் முடமாக்கப்படுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்
ஆக.08,2009. மாலி நாட்டில் பெண் பிறப்புறுகள் முடமாக்கப்படுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டுவரப்பட
வேண்டும் என்பதை வலியுறுத்தி 700க்கும் மேற்பட்ட பெண்ணுரிமை நடவடிக்கையாளர்கள் பமாக்கோவில்
பேரணி ஒன்றை நடத்தினர்.
மாலியின் அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட
இப்பேரணியின் முடிவில் மனு ஒன்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பெண்
பிறப்புறுகள் முடமாக்கப்படுவது மாலி நாட்டில் அதிகமாக இடம் பெறுகிறது, இது சுமார் 92
விழுக்காட்டை எட்டியுள்ளது என்று நீதியின்றி அமைதி இல்லை என்ற அரசு சாரா அமைப்பின் நிக்கோலா
ஜொவானின்னி கூறினார்.