வழிபாட்டு ஆண்டின் 19 ஆம் ஞாயிறு . மறையுரை .090809.
சாதி இரண்டொழிய வேறில்லை எனக் கூறி இட்டார் பெரியோர் இடாதோர் இழி குலத்தோர் என்றார் .
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றவர் . அவரைப் பல்லாண்டு
வாழவைப்பதற்காக அதியமான் என்ற மன்னவர் உச்சிமலை நெல்லிக்கனியைத் தேடிச்சென்றார் . அதை
உண்பவர் என்றுமே வாழ்வார் என மன்னர் நம்பினார் . ஆனால் அவர் கனவு நனவாகவில்லை .
கொலம்பஸ்
அமெரிக்காவைக் கண்டுபிடித்தபிறகு அந்நாட்டில் உள்ள ஒரு அற்புதமான நீரூற்றின் நீரைப் பருகினால்
பருகியவர் சாவதில்லை என்ற கதையைக் கேட்டார். அதை நம்பினார் வேறொரு சாதனையாளர் .
பயணம்
மேற்கொண்டார் இஸ்பானியக் கப்பல் பயணி போன்சி டி லியோன் . ஆனால் அவர் அந்த நீரூற்றைக்
கண்டு பிடிக்கவில்லை .
கொக்கூன் என்பது ஒரு ஆங்கிலத் திரைப்படம் . அதற்கு கூட்டுப்புழு
என்பது பொருள் . அதில் உள்ள முதியோர் வேறொரு கிரகத்துக்குச் சென்றால் இளமை ஊஞ்சலாடும்
என்று நம்பி வேறொரு கிரகத்துக்குப் பயணமாவது பற்றியது கதை .
சீனச் சுவரைக் கட்டியெழுப்பிய
மன்னன் சின் என்பவருக்கும் நிறைவேறாத ஓர் ஆசை . 2000 மைல் நீளமுள்ள சீனச் சுவரைக் கட்டிமுடித்த
அவரைச் சாவு அச்சுறுத்த ஆரம்பித்தது .அவருடைய மந்திரவாதிகள் கிழக்கே கடற்பகுதியில் சொர்க்கலோகத்
தீவு இருப்பதாகக் கூறி அவர்களிடம் உள்ள ரகசியத்தைப் பெற்றுவர விலைமதிப்பில்லாத பொருட்களைக்
கொடுக்க வேண்டும் எனக் கூறினர் . அவ்வாறே சின் செய்தார் . ஆனால் ரகசியம் வந்தபாடில்லை
. தீவிலிருந்தவர்கள் ரகசியத்தைத் தர மறுத்துவிட்டதாகக் கதை கூறுகிறது . வானவர்கள் அமிர்தத்தை
அமிழ்தை உண்டு உயிர் வாழ்வதாகக் கதையும் உண்டு .
இந்தக் கதைகள் நமக்குக் கூறுவதென்ன
. சொல்ல வரும் கருத்துத்தான் என்ன .
தொடக்கக் காலத்திலிருந்து மக்கள் சாகாவரத்தைத்
தேடி இருக்கிறார்கள் . முடிவில்லாத காலத்துக்கும் வாழ ஆசித்திருக்கிறார்கள் . முடிவில்லாத
வாழ்வை மறுவீட்டைப் பற்றி எண்ணியிருந்திருக்கிறார்கள் . மேலுலகம் பற்றி இன்றைக்கு 2000
ஆண்டுகளுக்கு முன்னர் கவிதை வரைந்த வள்ளுவர் பல குறள்களில் எழுதியிருக்கிறார் .
நாம்
அன்பு செய்த ஒருவர் காலமாகும்போது சாவு நிரந்தரம் என்பதும் சாகவரம் கிட்டாத கனி என்பதும்
உறுதியாகிக் கொண்டிருக்கிறது .
எனவே கிறிஸ்து நாதர் பாலஸ்தீனத்தில் முடிவில்லாத
வாழ்வைப் பற்றிப்பேசத் தொடங்கியதும் மக்கள் கவனமாக அவர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தார்கள்
. யூ.தர்கள் மிக ஆர்வமாகக் கேட்டார்கள் . ஏனெனில் அவர்களுக்கு ஆபிரகாம் , மோசே போன்றவர்களுக்கு
என்ன நடந்தது – அவர்கள் எங்குச் சென்றார்கள் – இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பன
போன்ற முக்கியமான கேள்விகள் அவர்களைத் துளைத்துக் கொண்டிருந்தன .
இறந்தவர்கள்
வாழும் உலகம் ஒன்று இருப்பதாக எண்ணினார்கள். எனவே இயேசுபிரான் மறுவாழ்வு பற்றிக் கூறியவை
அவர்கள் பசிக்கு விருந்தளிப்பதாக இருந்தன .
-----------------
இன்றைய
நற்செய்தியில் இயேசு மறுவாழ்வு பற்றிக் கூறுகிறார் . அவர் கூறும் முக்கியமான திருவாக்கியங்களைச்
செவிமடுங்கள்.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த
உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் . எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் . அதை
உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன் . என யோவான் அதிகாரம்
6 , 51 ல் கூறுகிறார்
.
இந்த உலக வாழ்வோடு முடிவதில்லை நம் வாழ்வு என இயேசு கற்பிக்கிறார். வேறொரு
வாழ்வு நமக்குக் காத்திருக்கிறது . அது முடிவில்லாதது .
இவ்வாறு இயேசு
கூறியதும் பல யூதர்கள் அதை நம்ப மறுத்து முணுமுணுத்தார்கள் . விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த
உணவு நானே என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள் . இவர்
யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா . இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா
. அப்படியிருக்க நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் என இவர் எப்படிச் சொல்லலாம்
என்று பேசிக் கொண்டார்கள் .
இயேசு சிலுவைச் சாவுக்குப் பிறகு உயிர்த்தெழுந்த
பிறகு அவருடைய வார்த்தைகளை மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார்கள் .
நாம்
இன்று வானொலியில் இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டிருக்கிறோம் . இயேசுவின் திருவுடல்
ஆலயத்தில் பரிமாறப்படுகிறது .
கப்பல் பயணி போன்சி டி லியோன் அமெரிக்காவில்
சாகாவரம் தரும் நீருற்றைத் தேடினார் . சீனர் பேரரசர் சின் சாகாவரம் தரும் ரகசியத்தைப்
பெற எவ்வளவு பொருளையும் கொடுக்கத் தயாரானார் . கூட்டுப்புழு திரைப்படத்தில் முதியவர்கள்
வேறொரு கிரகத்துக்கே பயணமாகத் தயாரானார்கள் .
இயேசுக் கிறிஸ்து கடவுளின் திருமகன்
, முடிவில்லாத வாழ்வைத் தரும் நீரூற்று , நம்மோடு இருக்கிறார் . அவர் நம்மோடு , வானொலியைக்
கேட்கும் உங்கள் ஒவ்வொருவரோடும் இயேசு உடன் இருக்கிறார் .
மத்தேயு நற்செய்தியில்
அதிகாரம் 18, 20 ல் இயேசு கூறுகிறார் .
உங்களுள் இருவர் மனமொத்திருந்தால் விண்ணுலகில்
இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார் .
இறைவாக்கில் இயேசு இருக்கிறார்
. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களுக்குக் கூறியதை இயேச நம்மிடமும் இப்போது கூறுகிறார்.
ஆலயத்தில் அருள்தந்தை வழியாக , குருவானவர் வழியாக அவர் பேசுகிறார் . உங்களுக்குச்
செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார் என்கிறார் . இயேசு தேவ நற்கருணையிலிருக்கிறார்
. வாழ்வு தரும் உணவு நானே . இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் என்கிறார்
இயேசு .
லூக்கா நற்செய்தி அதிகாரம் 10 , வசனம் 23 ல் நீங்கள் காண்பவற்றைக் காணும்
வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர் . ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள்
காண்பவற்றைக் காண விரும்பினார்கள் . ஆனால் அவர்கள் காணவில்லை . நீங்கள் கேட்பவற்றைக்
கேட்க விரும்பினார்கள் . ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்
என்று கூறினார் .
நாம் அனைவரும் இணைந்து செபிப்போமா . இறைவா உம் திருமகனின் பிரசன்னத்தை
எங்கள் சகோதர சகோதரிகளில் காண அருள்தாரும் .
உம் திருமகனின் குரலை நற்செய்தியின்
இறைவாக்கில் கேட்கும் வரம் தாரும் . உம் திருமகனை அவர் வழங்கும் நற்கருணை உணவில் கண்டு
ஏற்றுக்கொள்ளும் வரம் தாரும் . உம்மோடும் , உம் திருமகனோடும் , தூய ஆவியானவரோடும் முடிவில்லாத
காலமும் வாழும் வரமருள்வீராக . ஆமென் .